எந்த ஊராக இருக்கும்

தணல் தகிக்கும்
பாலை வெளியில்
ஒற்றைக்கால் தவம்
கடு பசியுடன்
உயிர் பறிக்கும் வல்லூறு
மர்ற்றுக்கால் மாற்றி வைக்க இயலாமல்
உயிர் தப்பும் எண்ணமுடன்
பதறி இடறி விழுகையில்
சற்றே விழிப்பு தட்டி
கனவென்று உரைக்கிறது காலம் - சரி
அந்த மணற்பரப்பு
எந்த ஊராக இருக்கும் ?

Comments